அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்த பெண் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், பயிற்சி மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெடுமரம் பகுதியைச்சேர்ந்த பிரமிளா என்ற அந்தப் பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த 4ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தாய்-சேய் இருவரும் வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், மறுநாள் பிரமிளாவின் வயிறு வீங்கி வலியால் துடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 6ஆம் தேதி உறவினர் சென்று பார்த்தபோது பிரமிளா சுயநினைவின்றி இருந்துள்ளார்.
அடுத்த 5 நாட்களுமே அவர் கண் விழிக்கவில்லை என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை டயாலிஸிஸ் செய்யப்பட்ட நிலையில், பிரமிளா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, உறவினர்கள் பிரமிளாவின் உடலை பெற்றுச்சென்றனர்.
Comments