பிலிப்பைன்ஸில், ஒரே வாரத்தில் கடலில் மூழ்கி 72 பேர் உயிரிழப்பு..!

0 1845

பிலிப்பைன்ஸில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்ட வாரத்தில், இதுவரை இல்லாத வகையில் 72 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவை முன்னிட்டு 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் முற்றிலுமாகத் தளர்த்தப்பட்டதால் கடற்கரைகளும், ரிசார்ட்டுகளும் நிரம்பி வழிந்தன.

பெற்றோர் துணையின்றி கடலில் தனியாக குளித்த சிறுவர்கள், மதுபோதையில் கடலில் குளித்தவர்கள் என ஒரே வாரத்தில் 72 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments