பிரான்ஸில் ஓய்வூதிய சீர்த்திருத்திற்கு எதிராக மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்..!

பிரான்ஸில், ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது. அதிபர் இமானுவேல் மேக்ரனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தால் அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு நடத்தாமல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 64 ஆக உயர்த்த பிரான்ஸ் அரசாங்கம், முடிவெடுத்ததை கண்டித்து நாடு முழுவதும் ஜனவரியிலிருந்து மக்கள் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், தலைநகர் பாரீஸில் திரண்ட போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களையும் - பட்டாசுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இருசக்கர வாகன ங்களை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர்புகை குண்டு வீசி போலீசார் விரட்டியடிக்க முயன்றனர்.
Comments