'கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என்ற கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்.? - அண்ணாமலை..!

0 868

பால் உற்பத்தியாளர்கள் போராட்ட விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழ்நாடு அரசு சுமூக உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டரில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில்,  ஆட்சிக்கு வந்தவுடன், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய திமுக அரசு, 'பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

பால் உற்பத்தியாளர்கள், 'ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம்' என்று போராட்டம் அறிவித்துள்ளதாகவும், இதனால் ஆவின் நிறுவன பால் நுகர்வோர்களுக்கு, 10 லட்சம் லிட்டர் அளவில், ஆவின் பால் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments