கத்தி முனையில், மகனிடம் பணம் பறிக்க முயன்ற தந்தை கைது..!

0 954

ஸ்காட்லாந்தில், தனது மகன் என்றே தெரியாமல் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

17 வயது சிறுவன் ஒருவன், ஏ.டி.எம்-இல் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளான். அங்கு முகக்கவசம் அணிந்தபடி நின்ற 45 வயது ஆசாமி, திடீரென சிறுவனின் கழுத்தை பின்னால் இருந்து பிடித்து, சுவற்றோடு சிறுவனை சாய்த்து, முகத்தில் கத்தியை வைத்து பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

குரலை வைத்து தந்தையை அடையாளம் கண்ட சிறுவன், முகத்தை மறைக்கும் வண்ணம் அணிந்திருந்த கழுத்து குட்டையை இறக்கியுள்ளான்.

தெரியாமல் செய்துவிட்டதாக மன்னிப்பு கோரிய தந்தையிடமிருந்து தப்பியோடிய சிறுவன், குடும்பத்தாரிடமும், போலீசாரிடமும் புகாரளித்துள்ளான்.

கைதான தந்தைக்கு 26 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments