மாண்டியாவில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு.. பெங்களூரு - மைசூரு அதிவிரைவுச்சாலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு.!

0 1593

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் நின்று மலர்கள் தூவி பொதுமக்களும் பாஜகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் வரவேற்பை ஏற்கும் விதமாக பிரதமர் மோடி கார் படியில் நின்று மக்களை நோக்கி கைகளை அசைத்தவாறு நீண்ட தூரம் சென்றார். இடையிடையே தனது கார் மீது இருந்து மலர்களை எடுத்து பொதுமக்கள் மீது பிரதமர் தூவினார்.

8,408 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு-மைசூரு இடையேயான 118 கிலோமீட்டர் தூர விரைவுச்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விரைவுச்சாலையால் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு செல்லும் நேரம் மூன்றரை மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரமாக குறையும்.

அதனைத்தொடர்ந்து மைசூரு-குஷால்நகர் இடையே 4,130 கோடி ரூபாய் மதிப்பில் 92 கிலோமீட்டர் தூர 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதனை முடித்துக்கொண்டு தார்வாட் செல்லும் பிரதமர், 850 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தார்வாட் ஐஐடியை நாட்டு அர்ப்பணிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments