சென்னை அருகே குற்றவழக்குகளில் தொடர்புடைய இளைஞர் படுகொலை..!

0 1350

சென்னை துரைப்பாக்கம் அருகே பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

மேட்டுக்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில், 22 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடந்துள்ளது.

தகவலறிந்து சென்ற துரைப்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.

இதில், அந்த இளைஞர், சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த முருகன் என்ற கண்மூடி முருகன் என்பது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் முருகன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும், சம்பவ இடத்தில் முருகன் தனது கூட்டாளிகளுடன் மது அருந்தியதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments