ஆம்னி பேருந்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 40லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார்..!

0 1472

திருப்பூரில் ஆம்னி பேருந்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 40லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவிநாசியில் போலீசார் வாகன சோதனையின்போது ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் வந்திறங்கிய நபரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர் கொண்டு வந்த கைப்பையில் 4 பொட்டலங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 40 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments