ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றத்தை தடுக்கக் கோரி கொட்டும் மழையில் மாணவர்கள் போராட்டம்

0 814

ஆஸ்திரேலியாவில், காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிட்னி நகரில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டம் நடத்திய மாணவர்கள், நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணியாக சென்றனர்.

காலநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் பின் தங்கியிருந்த நிலையில், கடந்தாண்டு மே மாதம் ஆட்சியை பிடித்த பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தலைமையிலான அரசு 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை 43 சதவீதம் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments