300 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஸ்வீடனில் தரையிறக்கம்..!

0 1177

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஸ்வீடன் திருப்பிவிடப்பட்டது.

AI 106 ஏர் இந்தியா விமானம் சுமார் 300 பயணிகளுடன் வந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, உடனடியாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் இன்ஜினில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments