சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் பலி..!

0 956

சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்சில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர்.

நேற்று, உணவு தேடி சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments