பண்டிகை நாட்களில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு கூடுதல் 'டிக்கெட்' கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை..!

0 1235

அரசு நிர்ணயித்ததைவிட அதிக 'டிக்கெட்' கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டிகை நாட்களில், புதிய திரைப்படங்ள் வெளியாகும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், திரையரங்குகளில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என சிறப்பு குழு அமைத்து கண்காணிக்குமாறும், விதிமுறை மீறல்களில் ஈடுபடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments