தமிழ்நாட்டில் புதிய ரயில் வழித்தடங்களுக்காக ரூ.1057.90 கோடி நிதி ஒதுக்கீடு

0 8129

தமிழ்நாட்டில் அமைய உள்ள புதிய ரெயில்வே வழித்தடங்களுக்காக ஆயிரத்து 57 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ஜூன் மாதம் பாம்பன் பாலம் வேலைகள் முடிந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என்றார். மதுரை போடி நாயக்கனூர் இடையிலான புதிய வழித்தட பணிகளுக்கு  104 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழ்நாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  தமிழ் தெரிந்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments