''சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்..'' - வானிலை மையம்..!

0 1122

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை - திரிகோணமலையில் இருந்து சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 1ம் தேதி காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக்கூடும் என்பதால், அன்றைய தினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

பிப்ரவரி 3ம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

மேலும், இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments