9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. 2 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு.!

0 2718

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜூலியஸ் ரவிச்சந்திரன் பணிபுரிந்து வருகிறார். அப்பள்ளியில் பயின்று வரும் மாணவியிடம், ரவிச்சந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், விசாரணைக்காக வந்த அதிகாரிகளை, அந்தப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் ஜெயபால் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து, தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமறைவாகிவிட்ட நிலையில், குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக, ஆங்கில ஆசிரியர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments