ஈக்வடாரில் சிறைக் கைதிகளிடையே மோதல் - 15 பேர் பலி

0 1622
ஈக்வடாரில் சிறைக் கைதிகளிடையே மோதல் - 15 பேர் பலி

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

Latacunga நகரில் உள்ள சிறையில் நேற்று கைதிகளிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

ஈக்வடார் சிறைச்சாலைகளில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே வன்முறைகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த மே, ஜூலை மாதங்களில் சாண்டோ டொமிங்கோவில் உள்ள சிறையில் நடந்த வன்முறையில் 56 கைதிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, மீண்டும் இந்த மோதல் நடந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments