இலங்கையில் 37 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!

இலங்கையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 37 பேர் இன்று புதிய ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
அதிபர் அலுவலகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதன்படி, ஜகத் புஷ்ப குமார் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய - நிதி அமைச்சராகவும், லசந்த அழகியவன்ன - போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா - விவசாயத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
இதேபோல் மேலும் 33 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
Comments