தாய் மற்றும் 2மகன்கள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி.. தீய பழக்கத்திற்கு மகன் அடிமையானதால் நேர்ந்த விபரீதம்..!

தாய் மற்றும் 2மகன்கள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி.. தீய பழக்கத்திற்கு மகன் அடிமையானதால் நேர்ந்த விபரீதம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்கள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைப்பட்டுவைச் சேர்ந்த சிவராஜ் என்பவருக்கு சசிகலா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். 12ஆம் வகுப்பு படிக்கும் மகன் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பெற்றோரின் பேச்சை மதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் மன உளைச்சல் அடைந்த தாய் சசிகலா வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக் கண்ட 2மகன்களும் அந்த மருத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். மூவரும் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Comments