சேர்சாட்டில் மாணவிகளை மயக்கும் மன்மத ராசா.. மனைவிகளுக்கு அல்வா.. ஆப்படிக்க தேடுகிறது போலீஸ்..!

0 43449
சேர்சாட்டில் மாணவிகளை மயக்கும் மன்மத ராசா.. மனைவிகளுக்கு அல்வா.. ஆப்படிக்க தேடுகிறது போலீஸ்..!

ஷேர் சாட் ஆப் மூலம் கல்லூரி பெண்களை மயக்கி திருமணம் செய்து ஏமாற்றி வருவதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி, இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு வயதி மகன் உள்ள நிலையில் ஸ்ரீதர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி வைதீஸ்வரி இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர், வைதீஸ்வரியை தாக்கியதுடன் செல்போனை உடைத்துவிட்டு வீட்டைவிட்டு சென்று உள்ளார்.

இதன்பின்னர் சில நாட்கள் கழித்து மனைவி கணவர் ஸ்ரீதரின் செல்போனை ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் சில ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

அதில் கணவர் ஸ்ரீதர் பிரபல இணையதளமான ஷேர் சாட் ஆப் மூலமாக பல கல்லூரி பெண்கள்,திருநங்கைகள் உள்ளிட்ட பலரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தவறான தொடர்பில் இருந்து வந்ததை பெண்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசும் ஆடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது

மேலும் வைதீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி உடன் ஆப்பில் பேசி நம்பவைத்து நெருக்கமாக பழகியுள்ளார்.அப்பெண் ஸ்ரீதரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து பெண்னை வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் அப்பெண்ணுடன் சில வாரங்கள் இருந்துவிட்டு தொழில் நிமித்தமாக செல்வதாக கூறி அங்கிருந்து சென்னை வந்து தங்கியதும் தெரியவந்துள்ளது

இது தொடர்பாக நியாயம் கேட்ட மனைவி வைதீஸ்வரியை கர்ப்பிணி என்றும் பாராமல் கடுமையாக தாக்கிய ஸ்ரீதர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.

எனவே முதல் திருமணத்தை மறைத்தும் தனது 15 சவரன் நகைகளை விற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பல பெண்களை ஏமாற்றி வரும் தனது கணவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 11ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.

நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பெண்களை ஏமாற்றி வரும் ஸ்ரீதரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments