மின்சார கார்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க டொயோட்டா நிறுவனம் திட்டம்.!

0 6654

மின்சார கார்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க 4800 கோடி ரூபாயை முதலீடு செய்ய டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோபார்ட்ஸ் ஆகியவற்றில் 4100 கோடி ரூபாயும், டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் இஞ்சின் இந்தியா நிறுவனத்தில் 700 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனம் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இதன்மூலம் 3500 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments