RECENT NEWS

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்... ஆபரேஷன் சிந்தூர், தீவிரவாதம், நதி நீர் கொள்கை குறித்து ஆலோசனை

முகப்பு

கம்பி எண்ணும் காவலர்கள்.. மனநலம் பாதித்த இளைஞர்.. கொலை வழக்கில்; நகை, பணம் சுருட்டல்!!!

Jun 02, 2025 12:14 PM

37

கம்பி எண்ணும் காவலர்கள்.. மனநலம் பாதித்த இளைஞர்.. கொலை வழக்கில்; நகை, பணம் சுருட்டல்!!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலீசார் நகை, பணம் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் வருண்காந்த். மனநலம் பாதித்த இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வருண்காந்தை காப்பக ஊழியர்கள் அடித்து கொலை செய்தனர். பின்னர் காப்பக நிர்வாகி கவிதாவுக்கு சொந்தமான நடுபுணியில் உள்ள தோட்டத்தில் உடலை புதைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதா உள்பட 11 பேரை கைது செய்தனர். மனநலம் பாதித்த இளைஞரை ஆழியாருக்கு சுற்றுலா அழைத்துச் சென்றபோது காணாமல் போனதாக நாடகம் ஆடியது அம்பலமானது.

முன்னதாக இந்த கொலை வழக்கில் தொடர்பு உடையவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் தனிப்படையைச் சேர்ந்த மகாலிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மகாராஜா உள்ளிட்ட போலீசார் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் கடந்த 28ஆம் தேதி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து காரில் தப்பிச்சென்ற கவிதா, சுருதி, ஸ்ரேயா உள்பட 5 பேரை கைது செய்தனர். இதில் கவிதா, சுருதி, ஸ்ரேயா ஆகியோரிடம் இருந்து 18 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பொதுவாக ஒரு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோரிடம் இருந்து மீட்கப்படும் பணம் மற்றும் நகைகள் அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையான பிறகு அவை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்.

ஆனால் பறிமுதல் செய்த நகை, பணம் குறித்து காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவற்றை அரசு கருவூலத்திலும் அவர் ஒப்படைக்கவும் இல்லை.

இதற்கிடையில் கைதுசெய்யப்பட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நகை பணம் குறித்து யாரும் கேட்ட வரமாட்டார்கள், அவற்றை அபேஸ் செய்துவிடலாம் என நவநீதகிருஷ்ணன் திட்டம் தீட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் கைதானவர்களின் உறவினர்கள் நகை, பணம் கையாடல் செய்திருப்பதாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள், காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டதில், உண்மை வெளிச்சத்திற்கு தெரியவந்தது. விசாரணையில் நகை, பணத்தை அவர் கையாடல் செய்ததை நவநீதகிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக நகை, பணத்தை கையாடல் செய்த காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கின் தனிப்படையில் இருந்த மற்றொரு காவல் உதவி ஆய்வாளர் மகாராஜா, நவநீதகிருஷ்ணனிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மகாலிங்கம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

கொலை வழக்கில் குற்றவாளிடமிருந்து 2 உதவி ஆய்வாளர்கள் நகை பணம் கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தோள் பட்டை உயரத்தில் ஆபத்தான மின்கம்பிகள்.. உயிர் பயத்தில் மக்கள்.. வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர்!..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies