தமிழ்நாடு
டாஸ்மாக் உபயத்தால் சாலையில் தாறுமாறாக ஓடிய இரு கார்கள்..! போதையால் மாறிய பாதை
May 31, 2025 04:21 AM
186
டாஸ்மாக் உபயத்தால் சாலையில் தாறுமாறாக ஓடிய இரு கார்கள்..! போதையால் மாறிய பாதை
தூத்துக்குடியில் மது போதையில் காரை ஓட்டிச் சென்று சாலையோரத்தில் நின்றவர்கள் மீது மோதிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதேபோல் திருச்சியிலும் மது போதையில் காரை ஓட்டிச் சென்ற நபர், பைக் மீது மோதியது கூட தெரியாமல் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
தூத்துக்குடி வி இ ரோட்டில் சுகம் ஓட்டல் அருகே உள்ள நடைபாதை பகுதியில் காலை ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக காத்திருப்பார்கள். இந்த நிலையில் காலை சுமார் ஒரு எட்டு மணி அளவில் வேகமாக வந்த இண்டிகா கார், நடைபாதை பகுதியில் நின்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் மீது மோதியபின், அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி விட்டு, அருகே இருந்த டீக்கடை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் முருகானந்தம், சக்தி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரை ஓட்டி வந்தவர், மினி சகாயபுரத்தைச் சேர்ந்த பிரைட் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், பிரைட்டுடன் வந்த பெண், தங்களைப் புகைப்படம் எடுக்கக் கூடாது என சுற்றி இருந்தவர்களை மிரட்டினார்.
இதேபோல் திருச்சி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், மது போதையில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார். முருகன் என்ற அந்த நபர், வியாழக்கிழமை நள்ளிரவு மது போதையில் வயலூர் சாலை, சீனிவாசா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். போதையில் வாகனம் மீது மோதியதை அறியாத முருகன் சுமார் 200 மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தை மோதி தள்ளிக் கொண்டே சென்றார்.
கார் தாறுமாறாக ஓடியதில் மேலும் சிலருக்கு காயப்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் கூச்சலிடுவதைக் கண்டு நிதானத்துக்கு வந்த முருகன், விபரீதத்தை உணர்ந்து காரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார். காரை பறிமுதல் செய்த போலீசார், முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu