எஸ்.ஐ தேர்வுத் தேதி ஒத்திவைப்பு
Jun 10, 2025
திடீரென தீப்பிடித்து எரிந்த பி.எம்.டபிள்யூ கார்
Jun 10, 2025
முகப்பு
ஜெயிலில் கஞ்சா கடத்திய பூனை...வசமாக சிக்கியது எப்படி?..
May 21, 2025 04:13 PM
216
பொதுவாக பூனைகள் சேட்டை செய்யும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம், பலருக்கும் பகிர்ந்திருப்போம். ஆனால், ஒரு பூனை போதைப் பொருள் கடத்தி ,கையும் களவுமாக மாட்டி கொண்டதை கேள்வி பட்டதுண்டா? ஆம்.. நிஜத்தில் அப்படி ஒரு கடத்தல் பூனை உள்ளது. எங்கே? என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்...
உலகம் முழுவதும் போதைப் பொருள் கடத்துபவர்களை கண்டு பிடிக்க பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்துவது ஒரு பழக்கமாக இருந்துவருகிறது. இந்த நிலையில், மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில், பூனையின் மூலம், போதைப் பொருட்கள் கடத்தப்பட்டது பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடத்தலுக்கு உதவிய பூனையையும் பிடித்து அதிகாரிகள் சிறைப்படுத்தி இருக்கிறார்கள்
கோஸ்டாரிகாவிலுள்ள போகோசி சிறைச்சாலையின் கண்காணிப்பு கோபுரத்தில், எரிக் தாமஸ் என்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது சிறைச்சாலையின் வெளிப்புறச் சுவற்றின் மீது சம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் கூடிய பூனை ஒன்று சகவாசமாக நடந்து வருவதைக் கண்டார். ஆனால் அதன் தோற்றத்தின் மீது தாமஸ்க்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
உடனே அங்கு விரைந்த காவலர்கள், அந்த பூனையை பிடிக்க முயன்றபோது அது, அங்கும், இங்கும் ஓடியது. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அந்த பூனையை சுற்றி வளைத்து பிடித்த அந்த காவலர்கள், பூனையை பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பூனையின் உடம்பில் அடையாளம் தெரியாத வகையில் மெல்லிய வெள்ளை நிறத்தில் துணி உறை ஒன்று சுற்றப்பட்டிருந்தது. பின்னர் அதிகாரிகள் அந்த துணி உறையை கத்தரிக்கோலால் கிழித்துப் பார்த்தனர். அப்போதுதான் அவர்களுக்கு முழு விவரமும் தெரியவந்தது. அந்த உறைக்குள் 236 கிராம் கஞ்சா மற்றும் 68 கிராம் ஹெராயின் ஆகியவை போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் போதைக்கு பயன்படுத்தப்பட்ட பூனையை அதிகாரிகள், சிறைக்கு அருகே இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து, இந்த பூனையை பயன்படுத்தி நீண்டகாலமாக சிறைக்குள் போதைப் பொருட் கடத்தல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், காவலர்கள் தங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த பூனையை பயன்படுத்தி போதைப் பொருட்களை சிறைக்குள் கொண்டுவந்தவர்கள் யார்? எத்தனை நாட்களாக இப்படி நடக்கிறது என்றும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அந்த பூனையின் நடமாட்டம் தொடர்பான பழைய சிசிடிவி காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu