முகப்பு
பெண் கிராம உதவியாளர் உயிருக்கு உலைவைத்த VAO... உயிரிழந்த மறுநாளே சிரித்தபடி லஞ்சம் வாங்கிய வீடியோவால் பரபரப்பு!
Apr 25, 2025 03:15 PM
4613
பெண் கிராம உதவியாளர் உயிருக்கு உலைவைத்த VAO...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேரு நகரைச் சேர்ந்தவர், அச்சிறுப்பாக்கம் கிராம உதவியாளரான 45 வயது கீதா. இங்கு கிராம நிர்வாக அலுவலகராக பணியாற்றிவரும் முத்துக்குமாரியை சந்திக்க வரும் ஆண்கள், மதுபோதையில் வருவதோடு, கிராம உதவியாளரான கீதாவிடம் தகராறு செய்வதாகவும் புகார் எழுந்தது. மேலும், வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி தனக்கு கொடுக்கும்படி வி.ஏ.ஓ முத்துக்குமாரி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதுவும், வி.ஏ.ஓ. முத்துமாரி லஞ்சம் வாங்குவதில் கில்லாடியாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்காமல் எந்த கையொப்பமும் போடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தநிலையில், ‘இனி நான் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் வாங்க மாட்டேன். நீதான் வாங்க வேண்டும். உன் மூலம்தான் என்னிடம் லஞ்சப்பணம் வரவேண்டும்’ என கீதாவை லஞ்சம் வாங்கித்தரச் சொல்லி, முத்துமாரி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
அதற்கு உடன்பாடில்லாததால் இதுகுறித்து, வருவாய் ஆய்வாளர் நாகராஜன், மதுராந்தகம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் ரம்யா ஆகியோரிடம் வி.ஏ.ஓ முத்துமாரி மீது, புகார் அளித்துள்ளார் கிராம உதவியாளர் கீதா. ஆனால், உயரதிகாரிகளோ “இதுல என்ன இருக்கு? லஞ்சம் வாங்கிக்கொடுக்கவேண்டிதானே?” என்கிற ரீதியில் கூறியுள்ளார். உடன்படாததால் கீதாவை, கார்னர் செய்ய ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், தமிழக அரசு உத்தரவின்படி, ஆட்சேபணையில்லா வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க கடந்த 17 ஆம் தேதி அச்சிறுப்பாக்கம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, கீதா சற்று தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த கோட்டாட்சியர் ரம்யா, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீதாவை அவமானப்படுத்தும் விதமாக திட்டியதாக கூறப்படுகிறது. அதாவது, கீதா ஏற்கனவே வி.ஏ.ஓ உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக்கொடுப்பதில்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு, இதுபோன்ற அடிக்கடி அவமனாப்படுத்தியதால் கீதா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச அதிகாரிகளின் டார்ச்சர் அதிகமானதால், அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து, கீதா விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு அச்சிறுப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், 23 ஆம் தேதி மாலை, கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், உயிரிழந்த கீதாவின் மகள் லாவண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், விசாரணை நடத்திவருகிறார். வி.ஏ.ஓ முத்துமாரி, ஆர்.ஐ.நாகராஜன், RDO ரம்யா உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கிக்கொடுக்கச் சொல்லி, 8 மாதங்களாக தனது தாய் கீதாவுக்கு கொடுத்த நெருக்கடி, மன உளைச்சல்தான் அவர் தற்கொலை செய்வதற்குக் காரணம் என புகார் அளித்துள்ளார்.
இந்தநிலையில்தான், வி.ஏ.ஓ. முத்துமாரி கையொப்பம் வாங்க வந்த பொதுமக்களில் ஒருவரிடம் லஞ்சம் வாங்கி, சிரித்தபடி தனது Bag-ல் வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu