RECENT NEWS

பேஸ்பால் வீரருக்காக பல் மருத்துவ சிகிச்சை மையத்தை அருங்காட்சியகமாக மாற்றிய மருத்துவர்.. டோக்கியோவில் சுவாரசியம்..!

பேஸ்பால் வீரருக்காக பல் மருத்துவ சிகிச்சை மையத்தை அருங்காட்சியகமாக மாற்றிய மருத்துவர்.. டோக்கியோவில் சுவாரசியம்..!

Mar 15, 2025

பேஸ்பால் வீரருக்காக பல் மருத்துவ சிகிச்சை மையத்தை அருங்காட்சியகமாக மாற்றிய மருத்துவர்.. டோக்கியோவில் சுவாரசியம்..!

பேஸ்பால் வீரருக்காக பல் மருத்துவ சிகிச்சை மையத்தை அருங்காட்சியகமாக மாற்றிய மருத்துவர்.. டோக்கியோவில் சுவாரசியம்..!

Mar 15, 2025

BIG STORIES

விடாமல் துரத்திய கர்மா.. ரிட்டயர்டு போலீசுக்கு 10 வருட ஜெயில் தண்டனை..!

Feb 26, 2025 09:26 AM

248

விடாமல் துரத்திய கர்மா.. ரிட்டயர்டு போலீசுக்கு 10 வருட ஜெயில் தண்டனை..!

ரிட்டயர்டு போலீசுக்கு 10 வருட ஜெயில் தண்டனை..!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்திற்கு இரவில் பெண்ணை அழைத்து சென்று விசாரணை என்று மானபங்கம் செய்ததாக ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் உட்பட 3 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவியை , கடந்த 2001 ஆம் ஆண்டில் பக்கத்து வீட்டில் நடந்த நகை திருட்டு தொடர்பாக விசாரிக்க போலீசார் செம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்

அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ரெங்கசாமி, காவலர்கள் வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோர் 20.02.2001ஆம் ஆண்டு அதிகாலை 2:00 மணிக்கு காவல் நிலையத்தில் வைத்து அந்த பெண்ணை விசாரித்துள்ளனர்

அப்போது அந்த பெண்ணை, இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசாரும் காவல் நிலையத்தில் வைத்து ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகின்றது.

அன்று மாலை வரை துன்புறுத்தி விட்டு மீண்டும் அந்த பெண்ணை, வீட்டிற்கு அனுப்பிய போலீசார், விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் வர வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த அந்த பெண், தன் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காப்பாற்றினர்.

இதைத்தொடர்ந்து பெண்ணின் கணவர் , தனது மனைவிக்கு நடந்த கொடுமைகளை விசரித்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ.விடம் புகாரளித்தார்.

அவர் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதன் பேரில் காவல் ஆய்வாளர் ரெங்கசாமி, காவல் சார்பு உதவி ஆய்வாளர்கள் வீரத்தேவர், சின்னதேவர் ஆகியோர் மீது பெண்ணை சட்டவிரோத காவலில் வைத்து மானபங்க படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிபதிகள் இந்த வழக்கை திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, செவ்வாய்கிழமை தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ரெங்கசாமி, காவல் சார்பு உதவி ஆய்வாளர்கள் வீரத்தேவர், சின்னதேவர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 36 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அந்த மூன்று பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்று மதுரை சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்து 24 வருடங்கள் கழித்து சம்பந்தப்பட்ட 3 பேரும் தண்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கனிமவளக் கற்களை கடத்தியதாக திமுக பிரமுகரின் மகன் மீது வழக்கு... இரு டிப்பர் லாரிகள் பறிமுதல்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies