ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் - காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

0 735

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாயத்து அளவில் பணியாளர்களைத் தேர்வு செய்ய புதுத் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

500 ரூபாய்க்கு மானிய விலையில் எரிவாயு சிலிண்டர், விவசாயிகளிடம் இருந்து கிலோ 2 ரூபாய்க்கு மாட்டுச் சாணம், அரசுக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

அறிக்கையை கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் வெளியிட்டனர். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments