பாசன வாய்க்காலில் விழுந்து மூழ்கிய காரில் இருந்து கணவன் - மனைவி இருவரும் பத்திரமாக மீட்பு..!

பாசன வாய்க்காலில் விழுந்து மூழ்கிய காரில் இருந்து கணவன் - மனைவி இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ரமேஷ், மனைவியுடன் நாகர்கோயிலில் இன்று ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம்,வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் கோமங்கலம் அருகே வந்தகொண்டிருந்தபோது, ரமேஷ் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாசன வாய்க்காலில் வீழ்ந்து மூழ்கியது. விபத்து இடத்துக்கு விரைந்த போலீஸார், மூழ்கிய காரில் இருந்து கணவன் - மனைவியை பத்திரமாக மீட்டனர்.
Comments