பாலத்தின் சுவரில் கார் மோதி விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

0 1374

சாத்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் சுவரில் கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

கோயம்புத்தூரில் வசிக்கும் ரிச்சர்ட் ராஜா தனது மனைவி மெர்லின், குழந்தைகள் ரோஷினி, ரோஹித் மற்றும் சகோதரர் ஜான்சன் ஆகியோருடன் சொந்த ஊரான திசையன்விளைக்கு நானோ காரில் சென்று திரும்பியுள்ளார். சாத்தூர் அருகே நள்ளிச்சத்திரம் பகுதியில் உள்ள குறுகலான பாலத்தில், அதிவேகத்தில் கார் நுழைய முயன்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து இடது சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், ரிச்சர்ட் ராஜாவின் மகன் ரோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மெர்லினும், மகள் ரோஷிணியும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலத்தை விரிவாக்கம் செய்யாமல் அப்படியே சாலை போடப்பட்டு இருப்பதோடு, இரவில் ஒளிரும் விளக்குகளும் அமைக்கப்படாததால்,  அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments