இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ,இன்று பிரான்ஸ் புறப்படுகிறார் பிரதமர் மோடி

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் நாட்டிற்குச் செல்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வினய் குவத்ரா, பிரான்ஸ் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்னேவைச் சந்திப்பதுடன், இந்திய வம்சாவளியினருடன் உரையாட உள்ளதாகத் தெரிவித்தார். அதிபர் மேக்ரன் அளிக்கும் இரவு விருந்திலும் மோடி பங்கேற்க உள்ளதாகவும் வினய் குவத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் கவுரவ விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் அதிபர் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ள பிரதமர், நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களையும் சந்திக்க உள்ளதாகவும் வினய் குவத்ரா குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்தபின் நாளை மறுநாள் ஐக்கிய அரபு செல்லும் பிரதமர், அபுதாபியில் மன்னர் முகமது பின் சயீதை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
Comments