தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்... தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..!

0 2989

தேனி மாவட்டம் பொம்மையக்கவுண்டன் பட்டியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நாய்கள் கடித்துக் குதறின.

வடக்கு பஜார் தெருவை சேர்ந்த அழகு ராஜா என்ற 5 வயது சிறுவன் மாலையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கூட்டமாக வந்த தெருநாய்கள் அவனை கடித்ததாக தெரிகிறது.

இதில் வலது கன்னத்தில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான். தேனி நகராட்சி பகுதியில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய பின்னரே, அப்பகுதியில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மக்கள், மாவட்டம் முழுவதும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments