''இந்தியாவில் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் பிரிக்க முடியாது..'' - ஆளுநர் ஆர்.என்.ரவி...!

0 1178

நமது நாட்டில் தேச பக்தியும், தெய்வ பக்தியும் இணைந்தே உள்ளதாகவும், அதனை பிரிக்க முடியாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரதீர பதக்கங்கள் பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றினார்.

அப்போது, போர்க்காலங்களில் ராணுவம் பின் நிற்கும் ஒட்டுமொத்த நாடும், அமைதி காலங்களில் அவர்களுக்கு வழங்க வேண்டிய பாராட்டுகளை தெரிவிப்பது இல்லை என்றார்.

மேலும், வீரமரணமடைந்த ராணுவ வீரர் வாழ்ந்த பகுதியில் உள்ள பள்ளிகளில், அவரது புகைப்படத்தை வைத்து, அவர் உயிர்நீத்த போர் உள்ளிட்ட வரலாறு எடுத்துரைக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments