கழிவறைத் தொட்டியின் மேற்கூரையை பிரிக்கும் போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு..!

0 1582

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். கானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார்.

இதற்காக கழிவறைத் தொட்டியின் மேற்பகுதியைப் பிரிக்கும் வேலையில் கொத்தனார் பாலச்சந்தர் இறங்கிய போது விஷவாயு தாக்கியதில் உள்ளே விழுந்து மயக்கமடைந்தார்.

இதனைப் பார்த்த சக்திவேல் என்பவரும், கிருஷ்ணமூர்த்தியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யும் போது அவர்களும் மயங்கி கழிவறைத் தொட்டியில் விழுந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மூவரையும் மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களைச் சோதித்த மருத்துவர்கள் மூவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து நிகழ்விடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments