ஆம்னி பேருந்தில் ஜெர்மன் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது..!

0 3534

ஓடும் ஆம்னி பேருந்தில் ஜெர்மன் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த பெங்களூர் இளைஞரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் தன்னார்வலராக சேவையாற்றி வருகிறார்.

பெங்களூருக்கு சுற்றுலா செல்வதற்காக ஆம்னி பேருந்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்ற போது, தோழியுடன் வந்திருந்த இளைஞர் மதுபோதையில் ஜெர்மன் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்பெண் கூச்சலிடவே, சக பயணிகள் இளைஞரை தாக்கி தோழியுடன் சேர்த்து பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டனர்.

இதுகுறித்து, ஜெர்மன் பெண் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடியோ ஆதாரங்களைக் கொண்டு பெங்களூர் பவானி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சரத்தை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments