"தலைவர் பதவியில் நீடிப்பது குறித்து ஓரிரு நாளில் தனது இறுதி முடிவை அறிவிப்பேன்"- சரத்பவார்

0 1984

கட்சியின் எதிர்காலம் கருதி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறிய சரத்பவார், இதுதொடர்பாக ஓரிரு நாளில் தனது இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

மும்பை Y B சவான் மையத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சரத்பவார் நீடிக்கவேண்டும் எனக்கோரி, அவரது ஆதரவாளர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

அவர்களை இன்று சந்தித்த சரத்பவார், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், இதுகுறித்து மகாராஷ்டிராவிற்கு வெளியே உள்ள கட்சி சகாக்களுடன் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments