சூடானில் தவிக்கும் தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

0 963
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க, தமிழக அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க, தமிழக அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சூடானில் உள்ள தமிழர்களுடன் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தொடர்பு உருவாக்கப்பட்டு, இந்திய தூதரகத்திற்கு உடனுக்குடன் தகவல்கள் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யா-உக்ரைன் போரின் போது, விமானம் மூலம் டெல்லி, மும்பைக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்கள், எப்படி தமிழக அரசின் செலவில், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனரோ, அதேப்போன்ற நடவடிக்கை இதிலும் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments