ஹரியானாவில் அரிசி ஆலை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி..!

0 868

ஹரியானா மாநிலம் கர்னலில், 3 அடுக்கு அரிசி ஆலை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை, அரிசி ஆலையில் சுமார் 150 தொழிலாளர்கள் இருந்தபோது, திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியான நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆலை கட்டடம் பாதுகாப்பற்ற முறையில் இருந்ததாக அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டப்படி ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments