கடலுக்கடியில் அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்குதல் நிகழ்த்தக்கூடிய டிரோனை பரிசோதித்த வடகொரியா..!

0 2644

கடலுக்கடியில் அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்குதல் நிகழ்த்தக்கூடிய டிரோனை மீண்டும் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.

இரண்டாம் ஹெய்ல் என பெயரிடப்பட்டுள்ள இந்த டிரோனை, ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் கடலுக்கடியில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தி பரிசோதனை நடத்தியது.

இந்த டிரோன், 71 மணி நேரத்தில், ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு கடலுக்கடியில் பாய்ந்து இலக்கை தகர்த்தாக வட கொரியா தெரிவித்துள்ளது.

கொரிய மொழியில் சுனாமி என்பதை குறிக்கும் விதமாக ஹெய்ல் என பெயரிடப்பட்டுள்ள இந்த டிரோன், எதிரி நாட்டு நீர் மூழ்கி கப்பல்களை எதிர்பாரத நேரத்தில் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments