புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்..!

0 1213

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் இரண்டு விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மாலதி சிவகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ஆறு மீனவர்களும் ஜெகதாப்பட்டிணம் துறைமுகத்தில் இருந்து முருகானந்தம் என்பவர் விசைப்படகில் சென்ற ஆறு மீனவர்களும் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments