சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு ஊழல் வழக்கு பதிவு..!

0 862

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.

2015-ம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு கருத்துப் பிரிவு உருவாக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் கருத்துப் பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுவதால், அரசு கருவூலத்திற்கு 36 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீது பல பொய் வழக்குகளைப் போட்டு, அவரை நீண்ட காலம் காவலில் வைப்பதே பிரதமரின் திட்டம் என்றும், இது நாட்டுக்கு வருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments