சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க திட்டம்..?

0 1788
சென்னை மாநகரில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகரில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் தற்போது மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Gross Cost Contract என்ற முறையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேருந்தின் ஓட்டுநர் தனியார் நிறுவனம் சார்பிலும், நடத்துநர் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பிலும் நியமிக்கப்படுவார் எனவும் தனியார் பேருந்துகள் ஈட்டக்கூடிய வருவாயில் ஒரு பகுதி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பணிமனைகளிலும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments