பேருந்தில் ஏற சென்ற போதை பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்....!

0 2019

தென்காசி மாவட்டம் கடையநல்லூரியில் மதுபோதையில் பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துனர் காலால் எட்டி உதைத்து, செருப்பால் தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ராஜபாளையம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து கடையநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது, மதுபோதையில் இருந்த ஒரு நபர் பேருந்தில் ஏற முயன்றுள்ளார்.

அந்த நபரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் தடுத்ததால், போதை பயணிக்கும் நடத்துனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் பயணியை காலால் எட்டி உதைத்ததோடு, செருப்பால் தாக்கி கீழே தள்ளிவிட்டதை அங்கிருந்தவர்கள் விடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments