இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாமல் சென்ற மாநக பேருந்து ஓட்டுநரை கத்தியால் தாக்கிய ரவுடிகள் கைது..!

0 1693

சென்னை, வண்ணாரப்பேட்டையில் இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாமல் சென்றதால் அரசுப் பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை கத்தியால் தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தாக்குதல் குறித்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பிராட்வேயிலிருந்து மணலி வரை செல்லும் தடம் எண் 56D பேருந்து வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த பரத்குமார், சந்தோஷ், ஹரிஷ்குமார், பாபு ஆகியோர் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் வஜ்ரவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பரத் கத்தியை எடுத்து வஜ்ரவேலுவை தாக்கியதில், காயமடைந்த ஓட்டுநர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து நான்கு பேரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments