சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என அனைத்திலும் பயணம் செய்ய 'ஒரே டிக்கெட்'

சென்னை நகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய 'ஒரே டிக்கெட்' திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து குழுமத்தின் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதனை செயல்படுத்துவதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த ஒரே பயணச்சீட்டு முறைக்கென தனியாக செயலியும் உருவாக்கப்படவுள்ளது.
அந்த செயலியில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். பின்னர் எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ததும், அதனடிப்படையில் மொத்த தொகை தெரியவரும்.
அதனை செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. மத்திய அரசின் Centre for Development of Advanced Computing என்ற நிறுவனம் ஒரு சில நகரங்களில் common mobility card திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், சென்னையிலும் இதனை அமல்படுத்த ஆலோசனை நடைபெறுகிறது.
Comments