சிவனுக்காக மாலை போட்டுக் கொண்டு மது அருந்தியதால் தட்டி கேட்ட தாயை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த மகன்..!

0 1599

சென்னை, வியாசார்பாடியில் சிவராத்திரியையொட்டி சிவனுக்காக மாலை போட்டுக் கொண்டு மது அருந்தியதால் தட்டி கேட்ட தாயை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாஸ்திரி நகரில் 1வது தெருவில் வசிக்கும் கண்ணகியின் மகன் அஜய் மீது அடிதடி வழக்கு உள்ள நிலையில், தினமும் குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 18ஆம் தேதி சிவராத்திரி என்பதால் மாலை அணிந்து சில நாட்களாக மது அருந்தாமல் இருந்தவர், நேற்று மீண்டும் மது அருந்தி, வீட்டு மொட்டை மாடியில் நான்தான் சிவன் எனக்கூறி கொண்டு ஆட்டம் போட்டதால், கண்ணகி கண்டித்து அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜய் பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக தாக்கிய நிலையில், சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கண்ணகியை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கண்ணகி உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments