இரண்டு வந்தே பாரத் ரயில்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

0 3757
இரண்டு வந்தே பாரத் ரயில்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

மும்பை-சோலாப்பூர் மற்றும் மும்பை -ஷிர்டி இடையிலான இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நாளை பிற்பகல் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

இரண்டு ரயில்களும் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.மலைப் பகுதிகளில் பயன்படுத்த வசதியாக இதன் பிரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர சாந்தாகுரூஸ்-செம்பூர் இணைப்புச் சாலை மற்றும் குரார் சுரங்கப்பாதை திட்டம் ஆகிய இரண்டு சாலைப் பணிகளையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments