அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்தவரை கடுமையாக தாக்கிய 5 போலீசார்..

0 1126
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில், போலீசார் கடுமையாக தாக்கியதில், கருப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதுதொடர்பான வீடியோ காட்சிகள் பகிரப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில், போலீசார் கடுமையாக தாக்கியதில், கருப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதுதொடர்பான வீடியோ காட்சிகள் பகிரப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆம் தேதி, மெம்பிஸ் நகரில், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக கூறி டயர் நிக்கோலஸ் என்பவரை, 5 போலீசார் கடுமையாக தாக்கினர்.

படுகாயமடைந்த நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், கருப்பினத்தை சேர்ந்த 5 பேர் மீதும் மோசமான தாக்குதல், தவறான நடத்தை உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

போலீசாரின் தாக்குதலை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நிக்கோலஸ் இறப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments