13 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வழிப்பறி கொள்ளையன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

0 2590

சென்னை அமைந்தகரையில் ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ய முயன்ற வழிப்பறி கொள்ளையனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

நேற்று முன் தினம் டியூஷன் செல்வதாக வீட்டில் இருந்து சென்ற 13 வயது சிறுமி, டியூஷனுக்கும் செல்லாமல், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கும் வராததால் பதறிபோன பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில், பள்ளிக்கு செல்லும் வழியில் சிறுமியிடம் பழகி ஆசை வார்த்தை கூறிய சஞ்சய் என்ற சைக்கோ சஞ்சய் என்பவருடன் சிறுமி சென்றது தெரியவந்தது.

அவர் மீது 6க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ஏற்கனவே இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே சிறுமியை மீட்ட போலீசார் சஞ்சயை கைது செய்தனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments