கண்டெய்னர் லாரியின் ரோப் அறுந்ததில் உதிரிபாகங்கள் கார் மீது விழுந்து விபத்து.!

0 2577

திருவள்ளூர் அருகே ஸ்ரீபெரும்புதூர் சாலையில், கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியில் கட்டப்படிருந்த தரமற்ற ரோப் அறுந்ததில், உதிரிபாகங்கள் விழுந்து கார் நசுங்கி சேதமடைந்தது.

ஓட்டுநர் ராஜ் என்பவர் தனது காரில் கேட்டர்பில்லர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை, அந்நிறுவனத்தில் இறக்கிவிட்டு, பின்னர் உணவு அருந்துவதற்காக சாலையோரம் காரை நிறுத்தி, அருகில் உள்ள உணவகத்திற்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. விபத்தின் போது ஓட்டுநர் ராஜ் காரில் இல்லாததால் உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments