கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.. அதிரப்பள்ளி அருவியில் ஆக்ரோஷமாக கொட்டும் வெள்ளநீர்..!

0 3262
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.. அதிரப்பள்ளி அருவியில் ஆக்ரோஷமாக கொட்டும் வெள்ளநீர்..!

கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பம்பா நதியில் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கேரளாவில் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருச்சூர் சாலக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது.

இதேபோல் ஆறன்முலா , பம்பா போன்ற முக்கிய நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

ஆலப்புழாவில் சாலைகளில் வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இடுக்கி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments