இந்தியாவிடம் 55 மில்லியன் டாலர் கடன் கோருகிறது இலங்கை

0 1897

யூரியா உள்ளிட்ட உரங்களை கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 55 மில்லியன் டாலர் பணத்தை கடனாக இலங்கை கோரியுள்ளது.

இந்தியாவிடம் இருந்து விவசாயத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமரின் முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஏற்றுமதி இறக்குமதி வங்கி மூலம் 55 மில்லியன் டாலர் கடன் அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் மகா அறுவடை பருவத்திற்கான யூரியா உரம் கொள்முதல் செய்ய கடன் வாங்குவதாக இலங்கை  தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments